Monday 1 April 2013

தலை உபாதைகளுக்கு...

தலை வலிக்கு:
 
மிளகைப் பாலில் அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போடவும். கை, கால்களை நீட்டி சவாசனம் செய்வது போல் உடல், மனம் இரண்டையும் நன்கு அமைதியுறச் (relax) செய்து ஐந்து நிமிடம் படுத்து எழுந்தால் தலைவலி குணமாகும்.

இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் பயத்தமாவு அரப்புத்தூள் தேய்த்துக் குளிக்கவும்.

தலைச் சுற்றலுக்கு:

முருங்கை இலைக் கொழுந்தைத் தாய்ப்பால் விட்டரைத்து நெற்றியில் பற்றுப்போடவும். சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சம் வேர், கிராம்பு இவைகளை வகைக்கு 5 கிராம் எடுத்து சூரணமாக்கி, தினம் இரண்டு வேளை சாப்பிடவும்.

தலை கனத்துக்கு:

சுக்குப் பற்றுப் போடலாம். வசம்பு பற்றுப் போடலாம். வால்மிளகை சுடு நீரில் அரைத்துப் பற்றுப் போடலாம்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...