Tuesday 25 February 2014

உடல் எடை குறைய - கொழுப்பை எரிக்கும் கொடம்புளி

பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?..

வாழ்க்கை முறை மாறியதால் உடல் பெருத்த மக்களின் பெரும் கனவுக்கு இங்கே விடை காண முயலும் விதமாக இந்த கொடம்புளி.

பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?....குறையும் .

ஆனால் பத்து நாளில் குறையாது

ஆனால் நாற்பது நாளில் குறையும்

Saturday 15 February 2014

7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை

சிலர் தொப்பையினால் மிகவும் சிரமப்படுகின்றனர். முக்கியமாக, உடல் உழைப்பு இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே வேலை செய்யும் நபர்களில் பெரும்பாலோருக்குத் தொப்பை இருக்கும். வாகன ஓட்டுனர்கள், கணினி முன் அமர்ந்து வேலை செய்வோரின் வயிறு விரைவில் பெருத்துவிடும்.

எடை குறைய எளிய வழிகள்...

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சங்கடம், உடல் பருமன். அதிலும், பெண்கள் மத்தியில் அதிகமாக நடக்கும் விவாதம், எப்படி இளைப்பது என்பதுதான்.

பதிமூன்றாம் நாள் போர்.

வீர அபிமன்யுவின் வீழ்ச்சி – அர்ஜுனனின் சபதம்.

போர் சங்கு முழங்கியது. கௌரவ படைகளும் பாண்டவ படைகளும் அணிவகுத்து நின்றன. இன்றைய போரில் எத்தனை தம்பியர்களை இழக்க போகிறோம் என்ற கவலையுடன் காத்திருந்தான் துரியோதனன். துரோணர் மீதும் கர்ணன் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்த போதிலும் அர்ஜுனனையும் அவன் சாரதியாகிய கிருஷ்ணரையும் பார்க்கும் போது போர்க்களம் அவனுக்கு ஒரு மாயவலை போன்றே தோன்றியது. இருப்பினும் எதை இழந்தாலும் அஸ்தினாபுரத்தின் சிம்மாசனம் ஒன்றின் மீதே இருந்தது அவன் குறிக்கோள்.

Friday 14 February 2014

பன்னிரண்டாம் நாள் போர்

தருமரை உயிருடன் பிடிக்க துரோணர் நேற்று செய்த அணைத்து முயற்சியும் பலனில்லாமல் போனது. காரணம் அர்ஜுனன் என்னும் கேடயம்.

Thursday 13 February 2014

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்..?

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

பதினொன்றாம் நாள் போர் - துரோண பருவம்

பத்தாம் நாள் போர் கௌரவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. கௌரவர்களுக்கு மட்டும் அல்ல, பாண்டவர்களுக்கும், போரில் பங்கு கொண்ட அணைத்து வீரர்களுக்கும், ஏன் தேவர்களுக்கும் கூடத்தான். பீஷ்மனை போன்ற ஒரு வீரன், சத்யவான், தர்மத்தின் பாதுகாவலன், இனி ஒரு முறை அந்த யுகத்தில் மட்டும் அல்ல எந்த யுகத்திலும் பிறக்கப்போவதில்லை. சரித்திர நாயகனாகவே அம்பு படுக்கையில் நித்திரை கொண்டிருந்தார் கங்கையின் மைந்தன்.......

Wednesday 12 February 2014

பத்தாம் நாள் போரும் --பீஷ்மர் வீழ்ச்சியும்

பீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது. கௌரவர்கள் அசுர வியூகத்தை அமைக்க, பாண்டவர்கள் தேவ வியூகத்தை அமைத்தனர். சிகண்டியை முன் நிறுத்திப் பாண்டவர்களின் படை முன்னேறியது. இதுவரை இல்லாத பாதுகாப்பு இன்று பீஷ்மருக்கு இருந்தது. இன்று பீஷ்மரை கொன்றாக வேண்டும் என்று பாண்டவர் பாசறையில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. 

Tuesday 11 February 2014

முக்தியை நோக்கி எத்திக்கும் செல்லவேண்டாம் – முருகன் மூல மந்திரம்

யாமிருக்க பயமேன் 



ஸ்ரீ சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்த குரு கவசத்தில் முருகனின் மூல மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை தியானித்து உருஏற்ற முருகனின் அருள் கிடைத்து மும்மலங்கள் ஆகிய ஆணவம், கன்மம்,

ஒன்பதாம் நாள் போர்

பீஷ்மர் சர்வதோபத்ர வியூகம் வகுத்தார். பாண்டவர்களும் அதற்கேற்ப திரிசூல வியூகம் வகுத்தனர். திரிசூலத்தின் மும்முனைகளிலும் பாண்டவர்களின் சிறந்த வீரர்களான, அர்ஜுனன், திருஷ்டத்துய்மன், பீமன் என்ன முறையே நின்றனர். தருமர், அபிமன்னு மற்றும் திரௌபதியின் ஐந்து புத்ரர்களும் (பிரதிவிந்தியன் யுதிர்ஷ்டிரனுக்கும், சுதசோமன் பீமனுக்கும், சுருதகீர்த்தி அர்ச்சுனனுக்கும், சதாநீகன் நகுலனுக்கும்,

Monday 10 February 2014

நம் உடல் உறுப்புக்களின் காலங்கள்.... உடற்கடிகாரம்!!!


நம் உடல் உறுப்புக்களின் காலங்கள்.... உடற்கடிகாரம்!!!
-----------------------------------------------------------------------------

இந்த அண்டவெளியில் எல்லாமே கால ஒழுங்கிலேயே இயங்குகின்றன. அவ்வாறே நம் உடலும் இயங்குகின்று. காலம் தவறினால் காலன் நெருங்கிடுவான் என்பார் நம் முன்னோர் (இயற்கையே கடவுள்).

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தைப் போன்று உடற்கடிகாரம் முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது.

ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும். காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம். காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் இரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின்செரிமானசக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல்கூடாது இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம் இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படவேண்டிவரும்...

>>>> Nature is God - இயற்கையே கடவுள்


இந்த அண்டவெளியில் எல்லாமே கால ஒழுங்கிலேயே இயங்குகின்றன. அவ்வாறே நம் உடலும் இயங்குகின்று. காலம் தவறினால் காலன் நெருங்கிடுவான் என்பார் நம் முன்னோர் (இயற்கையே கடவுள்).

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தைப் போன்று உடற்கடிகாரம் முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது.

எட்டாம் நாள் போர்

நேற்றைய போரில் நடந்த இழப்புகளை சரி செய்ய வேண்டும். பாண்டவர்களின் படைகளை சிதறடிக்க வேண்டும் என்று கௌரவ பாசறையில் முடிவு செய்ய பட்டிருந்தது. துரியோதனன் படை தளபதிகளுடன் கோபம் கொண்டான். கௌரவ படைகள் சீற்றடுடன் காணப்பட்டது. ஆனால் பாண்டவ படைகளோ நேற்று கிடைத்த வெற்றியினாலும், இரவு கண்ணன் விருந்தாக கொடுத்த வேணு கானதினாலும், உற்சாகத்துடன் போர் செய்தனர்.

ஏழாம் நாள் போர்

ஆறாம் நாள் போரில் சோர்வடைந்த துரியோதனன் அடுத்த நாள் காலை பீஷ்மரிடம் முறையிட்டான். ”எனது அச்சமும்..சோர்வும் என்னை விட்டு அகவில்லை. உங்கள் உதவி இல்லையேல் நான் எப்படி வெற்றி பெறுவேன்? ” எனக் கெஞ்சிக் கேட்டான். பீஷ்மர் “என்னால் முடிந்த அளவிற்கு போர் செய்து கொண்டு தான் இருகிறேன்” என்று கூறினார். .

ஆறாம் நாள் போர்

ஆறாம் நாள் போரில் திருஷ்டத்துய்மன் மகர வியூகம் அமைத்தான். பீஷ்மர் கிரௌஞ்ச வியூகம் அமைத்தார். ஒருவருடன் ஒருவர் போர் புரிந்தனர். பீமன் அன்று சிறப்பாக போரிட்டான். பகைவர்களக் கொன்று குவித்தான். யானை படைகள் இவன் ஆற்றல் கண்டு மிரண்டது.... குதிரை படைகள் தெறித்து ஓடின.... 

Friday 7 February 2014

ஐந்தாம் நாள் போர்

பீஷ்மர் மகர வியூகம் வகுத்தார்.வடிவத்தில் இது முதலைப்போல் இருக்கும். திருஷ்டத்துய்மன் சியேன வியூகம் அமைத்தான். இது பருந்து போன்றது. பல ஆயிரம் பேர் மாண்டனர். துரியோதனன் துரோணரைப் பார்த்து

நான்காம் நாள் போர்….

நான்காம் நாள் பீஷ்மர் வியாளம் என்ற வியூகத்தை அமைத்தார். ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் போர் புரிந்தார். அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன் ..அவ்வனுமானின் பேராற்றலுடன் போரிட்டான் அர்ஜுனன். அபிமன்யு போர் முனைக்கு வந்தான்.

Thursday 6 February 2014

மூன்றாம் நாள் போர்

இரண்டாம் நாள் போரில் கௌரவர் கை தாழ்ந்திருந்தது. அதனால் மூன்றாம் நாள் போரை மாற்றி அமைக்க பீஷ்மர் விரும்பினார். படைகளை கருட வியூகமாக அமைத்தார். அதன் தலைப்பக்கம் பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா, சல்லியன், பகதத்தன் ஆகியோர் பொருத்தமான இடத்தில் நின்றனர். துரியோதனன் அவ்வியூகத்தின் பின் புறத்தில் நின்றான். அதை முறியடிக்கும் விதத்தில் பாண்டவர்களின் தளபதியான திருஷ்டத்துய்மன் தன் படைகளை பாதி சக்கர வியூகமாக அமைத்தான். அவன் வலப்பக்கமாக நின்றான். அதன் இரண்டு பக்கங்களிலும் பீமனும், அர்ச்சுனனும் நின்றனர். தர்மர் இடையில் நின்றார். மற்றவர்கள் பொருத்தமான இடங்களில் நிறுத்தப்பட்டனர்.

இரண்டாம் நாள் போர்

முதலாம் நாள் போரில் உத்தரனும்..சுவேதனும் கொல்லப்பட்டதால்..அதை மனதில் கொண்டு இரண்டாம் நாள் போர் படைகள் திருத்தி அமைக்கப் பட்டன. கிரௌஞ்சப் பறவை வடிவில் படைகளை அமைப்பதால்..அதற்கு கிரௌஞ்ச வியூகம் என்று பெயர். துருபத மன்னன் அதற்குத் தலையாக நின்றான். தருமர் பின் புறத்தில் நின்றார். திருஷ்டத்துய்மனும்,பீமனும் சிறகுகளாக இருந்தனர்.

போரின் முதல் நாள்.

போர் தொடங்கும் நேரம்..தருமர்..தன் போர்க்கருவிகளைக் கீழே வைத்தார்.போருக்குரிய கவசங்களை நீக்கினார்.எதிரணியிலிருந்த பீஷ்மரை நோக்கிப் போனார்.இதைப் பார்த்தவர்கள் வியந்தனர்.

பீஷ்மர்..முதலியவர்களிடம் ஆசி பெறவே தருமர் செல்வதாக கண்ணன் நினைத்தார்.துரியோதனன் பக்கம் இருந்தவர்கள்..அவர் சரணடைய வருவதாக எண்ணினர்.

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...