Sunday 16 June 2013

வெயில் காலத்துல உங்க முகத்துல எண்ணெய் வடியுதா?

வெயில் காலத்தில் வெளியில் போவதென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் அக்னி வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்துவிடும். கவலையை விடுங்க எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்

Saturday 15 June 2013

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

Thursday 13 June 2013

தொப்பை இருக்கா? குறைக்க வழி இருக்கு!

1. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

Sunday 9 June 2013

சிதம்பர இரகசியம் என்றால் என்ன ...?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான இரகசியங்கள் மற்றும் ஆச்சர்யங்கள் இவைகள் தான்.

சிதம்பரம் நடராஜர் கோயில் இரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்தக் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

Saturday 8 June 2013

The significance of the Linga :

As we have known,modern science is now starting to agree that everything comes from 

nothing and goes into nothing... For instance.. a whole huge galaxy just goes into nothing - the 

black hole.Nothingness is the basis of somethingness.Everything came from nothing and goes 

to nothing.

திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?

திருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள். 

திருஷ்டி என்பது என்ன?

ஒரு மனிதனின் கண் ஒளிக்கு, வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.”கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி.மனிதனின் கண்பார்வைக்குத் தனித்த மகத்துவம் உண்டு. மனத்தின் உணா்ச்சிகளை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு அதிகமான பங்கு உண்டு.

கண் பார்வை மூலமாகவே பார்க்கப்படும் பிற மனிதனின் மன நிலையையோ, உடல் நலத்தையோ, வாழ்க்கை நிலையையோ, மேன்மையாக்கிவிட முடியும் அல்லது சீா் குலைத்துவிட முடியும்.
சித்தா்கள், யோகிகள், ஞானிகள் இவா்களின் அருட்பார்வை பெற்ற ஒருவா் மேன்மையடையலாம்.பொறாமை மிக்கவா்கள் பார்வையால் ஒருவனது உடல் நலம், தொழில், வியாபாரம் பாதிக்கப்படுவது உண்டுகண் பார்வை மூலமாகப் பிறா்க்குப் பாதிப்பு ஏற்படுவதைக் கண் திருஷ்டி என்று கூறுவா்.

ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் லட்சியங்களும்,ஆசைகளும் உண்டு.அதற்காக மனிதன் தன் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு போராடுகிறான்.தன்னுடன் சமமான மனிதர் உயர்வடையும்பொழுது,சிலருக்கு உயர்வடையும் மனிதரை பார்க்கும்பொழுது ஏக்கமாகவும்,பலருக்கு பொறாமையாகவும் எண்ணங்கள் தோன்றுகின்றன.நம்முடைய தீய எண்ணங்களின் வெளிப்பாடே திருஷ்டி ஆகும்.

ஒரு மனிதன் வாழ்வில் எந்த நிலையில் எப்படி வரவேண்டும் என்பது கடவுளால் தீர்மானிக்கப்பட்டதாகும்.இதை விதி என்றும் சொல்லலாம்.நல்ல எண்ணம்,அடுத்தவர் வளர்ச்சியில் மகிழ்ச்சியடைவது.நல்ல பண்பு,தர்ம குணம்,தன்னை போல பிறரை எண்ணுவது இந்த குணநலன்கள் உள்ள நபரை திருஷ்டி ஒன்றும் செய்யாது.

மற்றவர்வகள் நம்மை நல்ல விதமாகவோ,தீய விதமாகவோ நினைக்கவேண்டும் என்பதை,நாம் தீர்மானிக்க முடியாது.ஆனால் நாம் மற்றவர்களை எந்தவித கெட்ட எண்ணங்களும் இல்லாமல்,பொறாமை கொள்ளாமல் நினைத்து,நம்முடைய செயலையும்,கடமையையும் செய்தாலே போதும்,நம்முடைய வளர்ச்சியை,எந்த கண் திருஷ்டியாலும் தடுக்க முடியாது.

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...