Saturday 18 May 2013

53. கீரனைக் கரையேற்றிய படலம்!

சுந்தரரின் கோபத்தால் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கினார் நக்கீரன். வந்தது ஈசன் என்பதை உணர்ந்த செண்பக பாண்டியன், உணர்ச்சியும் சோகமும் மேலிட நக்கீரரை மீண்டும் பெறும் பொருட்டு கோயில் நோக்கி ஓடினான். மற்ற புலவர்களும் தொடர்ந்து ஓடிச் சென்று,
இறைவனிடம் மீண்டும் நக்கீரரை சங்கத்திற்கு தந்தருள கண்ணீருடன் வேண்டினர். இறைவனும் ரிஷபத்தில் தோன்றி, நக்கீரரை பொற்றாமரை குளத்தில் இருந்து வெளிவரச் செய்தார். முன்பு நக்கீரரை அழற் கண்ணால் நோக்கிய சோமசுந்தரக் கடவுள் இப்போது அருட்கண்ணால் நோக்கியருளினார். அன்னை உமையவளின் கூந்தலுக்கு இயற்கை மணமில்லை என்று சொன்னதற்காக வருத்தம் தெரிவித்தார். திருக்காளத்தியர் மீது நேரிசை வெண்பாவினால் கயிலை பாதி, காளத்தி பாதி என்னும் அந்தாதியைப் பாடினார். கவிதாஞ்சலி செய்தார். அந்த அந்தாதியைத் திருச் செவிமடுத்து, நேரில் வந்து நக்கீரனுடைய கையைப் பிடித்து கரையின் கண் ஏற்றினார் எம்பெருமான். இறைவனின் கோபத்தைப் பெற்ற பாக்கியம் அடைந்த அவர், அதைப் பிரசாதமாகக் கருதி கோபப்பிரசாதம் என்னும் பாமாலை பாடினார். நக்கீரன் கருணைக் கடலாகிய சோம சுந்தரக் கடவுளையும், மீனாட்சியம்மையாரையும் வணங்கினான். தீமை செய்தோருக்கும் நன்மை செய்ததைப் பொளுõகச் செய்யுளில் அமைத்துக் கை கொடுத்து கயிலை வாசனை ஏற்றிப் போற்றினான். சோமசுந்தரக் கடவுள் நக்கீரனுக்குத் திருவருள் கனிந்து முன் போலவே நன்கு புலவர் கூட்டத்தில் இருக்கக் கடவாய்! என்று அருளி மீனாட்சியம்மையோடு மறைந்து திருக்கோயிலினுள் வீற்றிருந்தார். தருமிக்கு பொற்கிழி பரிசு வழங்கப்பட்டதுடன், பலவித சலுகைகளையும் மன்னன் அளித்தான். தமிழுக்காக குரல் கொடுத்த நக்கீரரின் இலக்கண அறிவை மேலும் பலப் படுத்த எண்ணினார் இறைவன்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...